tamilnadu

img

‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..

சென்னை:
தமிழ் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் உரிமையாளருமான க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 76.கொரோனா பாதிக்கப் பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். சமகாலத்தில் தமிழ் பதிப்புத் துறையில் தனித்த அடையாளமாக விளங்கிய ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூத்துப்பட்டறை, ரோஜா முத்தையா நூலகம், மொழி அறக்கட்டளை என பதிப்பகத்திற்கு வெளியேயும், கலை, இலக்கியம் என பங்காற்றியவர் இவர். சுவாசக் கருவி பொருத்திய நிலையில், தமது க்ரியா அகராதியின் திருத்தப்பட்ட 3ஆம் பதிப்பினை இரண்டு நாளுக்கு முன்பு  வெளியிட் டார். இந்நிலையில் தற் போது அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.ராமகிருஷ்ணனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தமிழ் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான ‘க்ரியா’ பதிப்பகம் ராமகிருஷ்ணன்? கொரோனா தொற்றுக்கு இரையாகி உயிரிழந்தார் என்ற செய்தி, தீயாக நெஞ்சில் இறங்கி, தாங்க முடியாத அதிரச்சியையும் வேதனையையும் தருகிறது.

ராமகிருஷ்ணன் அவர் கள் வெளியிட்ட ‘தற்காலத் தமிழ் அகராதி’, தமிழ் கற்கும் அனைவர்க்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அரிய கருவூலமாகும். பதிப்புப் பணியை தவமாகவே மேற்கொண்டு, முன்னணி எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டவர்.மரணப் படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்ட அவருடைய தொண்டறத்தைப் போற்றி, அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடு செய்ய இயலாத, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவினால், துயர்ப்படும் குடும்பத்தினர் - உறவினர்கள் - நண்பர்கள் - தமிழ்ப் பதிப்புலகத்தினர் அனைவர்க்கும் எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்”இவ்வாறு  குறிப் பிட்டுள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் துரை. ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.