தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி, பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
கோவை, வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி மற்றும் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டலின் வியாழனன்று காலை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட அகழாய்வு பொருள்களின் மாதிரிகள், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. இதில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, வெள்ளகோவில் சுவாமிநாதன், தங்கம் தென்னரசு, அன்பரசன், கயல்விழி செல்வராஜ், தமிழக முதன்மைச் செயலாளர் உதய சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி.ஆ.ராசா மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.