சென்னை விமான நிலையத்தில் ரூ.4.21 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாய் விமானத்தில் கடத்தி வரப்பட்டு சென்னை விமான நிலையத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 9.02 கிலோ எடையுள்ள தங்கத்தின் மதிப்பு 4.21கோடியாகும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.