tamilnadu

img

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000 ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியதாவது:

“முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசு ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு ரூ.21.000/-லிருந்து ரூ.22,000/-ஆகவும், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாநில அரசு குடும்ப ஓய்வூதியத்தினை மாதமொன்றிற்கு ரூ.11,500/-லிருந்து ரூ.12,000/-ஆகவும் உயர்த்தி வழங்கலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.

மேற்கண்டவாறு உயர்த்தி வழங்கப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூ.27,63,750/- (ரூபாய் இருபத்தி ஏழு இலட்சத்து அறுபத்தி மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இந்த ஓய்வூதிய உயர்வானது 15.08.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.