tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தர்ணா

திருக்கோவிலூர் வட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனை முன்பு வெள்ளியன்று (ஆக.14) தர்ணா நடைபெற்றது. வட்டச் செயலாளர் எம்.எஸ்.கே.ஹரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, துணைச் செயலாளர் மு.சிவகுமார், நிர்வாகிகள் ரமேஷ், ஆறுமுகம், செம்மலை, தீனா, கண்ணன், திருமலை, தமிழரசன், மணிவண்ணன், பழனி, ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.