கரும்பு விவசாயிகள் சங்கம் ரூ.1 லட்சம் தேர்தல் நிதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, மக்களவைத் தேர்தல் நிதியாக, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஒரு லட்சத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் வழக்கறிஞர் என். பழனிச்சாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் வழங்கினர்.
முகநூலில் அவதூறு தகவல்- பாமக பிரமுகர் மீது வழக்கு
அரியலூர், ஏப்.1- மக்களவைத் தேர் தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், சிதம் பரம் தொகுதியில் பணி யாற்றி வரும் போக்கு வரத்துத் துறை அமைச்சரும் அரிய லூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப் படுகிறது.
இதுகுறித்து திமுக வழக்கறிஞர் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் பிரபு மீது அரியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவ றான செய்தி வெளியிட்டதாக திமுக வழக்கறிஞர் ராஜசேகர் கொடுத்த புகா ரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடை யார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் திருமுருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.