tamilnadu

img

எழுத்தாளர் கோவை  ஞானி மறைவுக்கு சிபிஎம் இரங்கல் 

சென்னை:
எழுத்தாளர் கோவை ஞானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திவருமாறு: எழுத்தாளர் கோவை ஞானி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுசார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இலக்கிய திறனாய்வாளரானகோவை ஞானி ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  தமிழ் இலக்கியபண்பாட்டு சூழலில் இடையறாது இயங்கி வந்தவர் அவர்.  மார்க்சியத்தின் மீது மிகுந்தஈடுபாடு கொண்டவர். இரு கண்களும் பார்வையை இழந்தபோதும்,  வாசிப்பை அவர் கைவிடாமல் இலக்கியத் தளத்தில் இயங்கி வந்துள்ளார்.  கருத்து வேறுபாடு கொண்டவர்களோடும், நட்பு பாராட்டி வந்தவர். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட்   கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;