மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 91, 92வது வட்டங்களிலும், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு பணிகள் குறித்த மனுவை அம்பத்தூர் மண்டல உதவி ஆணையர் தமிழ்செல்வனிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர்கள் சு.பால்சாமி (அம்பத்தூர்), வி.தாமஸ் (மதுரவாயல்) ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வின்போது வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் லெனின் சுந்தர், தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.