tamilnadu

img

சென்னை மருத்துவருக்கு கொரோனா...

சென்னை 
ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தமிழகத்தில் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி மக்களை மிரட்டி வருகிறது. எனினும் கடந்த மூன்று கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசு கூறியுள்ள நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும்  மருத்துவருக்கு ( 34 வயதான)  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த மருத்துவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பணியாற்றிய இதயநோய் சிகிச்சைப் பிரிவு கட்டடம் உடனடியாக மூடப்பட்டது. மேலும் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்ததும் சென்னை ராஜீவ்காந்தி இதய நோய் பிரிவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பது தெரிய வரும்.