சென்னை
மாநில அரசின் அலட்சியத்தால் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரமாகச் சென்னை சுற்றிய பகுதிகளுக்கு கோயம்பேட்டிலிருந்து கொரோனா பரவிய நிலையில், தற்போது வெளிமாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இதில் அரியலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கோயம்பேடு கொரோனாவால் அதிக சேதாரத்தைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.