tamilnadu

img

சத்தியமூர்த்தி பவனில்  இன்று காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் கூட்டம்.....

சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இவர்களில் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஸ்குமார் ஆகியோர் மூன்றாவது முறையாகவும், ராஜ்குமார், முனிரத்னம், செல்வ பெருந்தகை ஆகியோர் இரண்டாவது முறையாகவும் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள். மீதம் உள்ள 12 பேரும் முதல் முறையாக எம்.எல்.ஏ.க் களாக வெற்றிபெற்றுள்ளனர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை சத்திய மூர்த்திபவனில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

;