தூய்மை பணியாளர்கள் கைதை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை, ஆக.18 - சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி யாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்வதோடு, தனியார்மயத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக பணியாற்றும் தொழி லாளர்கள் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஆக 18) சிஐடியு மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் என். ரமேஷ் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகள் தனியார்மயத்தை எதிர்த்து கடந்த 13 நாட்களாக வெயில், மழை பாராமல் நியாய மான கோரிக்கைகளுக்காக ரிப்பன் மாளிகை முன்பு அறவழியில் போராட்டத் தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வராமல் பணியாளர்களை பல வந்தமாக கைது செய்து, கைபேசி பறிப்பது, பெண் தொழிலாளர்களை மிரட்டுவது போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கை களில் சென்னை மாநகர காவல்துறையின் அத்துமீறல் கண்டிப்பதோடு போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, சிஐடியு மாவட்ட அமைப்பாளர் ஆ. தவராஜ், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் ஏபிஎம். சீனி வாசன், காமராஜ், பி. மணி, ஆர். மணி கண்டன், தா. வெங்கடேசன், எஸ். முரளி தாஸ், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கேகேவி. பாபு, வாலிபர் சங்க நிர்வாகி செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.