tamilnadu

img

பட்டா கேட்டு இயக்கம்...

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை, இந்நிலையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.ரகுபதி தலைமையில் திங்களன்று (ஜூன்10) சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தி புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் மருதாளம் வேலு, பாராஞ்சி பிரசாத், கூடலூர் அப்பு ஆகியோர் பங்கேற்றனர்.