சென்னை;
சென்னை கிண்டி ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில் சிலருக்கும், பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளளது.விடுதியில் தங்கியுள்ள 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதிபடுத்தப் பட்ட நிலையில் விடுதியில் தங்கியிருந்த இதர மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து அந்த மாணவர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதற்கான முடிவு புதன்கிழமை கிடைக் கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.