tamilnadu

img

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம், மக்கள் இயக்கம்!

சென்னை,ஜன.8- நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை நடத்துவது என்றும் அதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கமாகவும் முன்னெடுத்து செல்வது என்றும் முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்பு களுக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்றிய அரசு நீட் தேர்வுக்கான திருத்த சட்டம் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய சட்டம்  ஆகியவற்றின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க் கையில் நீட் தேர்வை முன் நிறுத்தியுள்ளது. தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த தீர்மானம் இதுவரை குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படா மலேயே இருக்கிறது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் வி.என். ரவியை சந்தித்து இது தொடர்பாக பேசி னார். அதன் பிறகும் அந்த சட்ட முன் வடிவை குடி யரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதை யடுத்து திமுக எம்.பி.க்கள் தில்லியில் குடி யரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்த னர். அதன்பின்னர்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் சந்தித்து நீட்  தேர்வு விலக்கு தொடர்பாக மனு கொடுக்க அனு மதி கேட்டனர். ஆனால் தமிழக எம்.பி.க்களை அமித்ஷா சந்திக்க மறுத்து விட்டார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதுபற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் தொடரும். அதை தொடர்ந்து முன் எடுத்து செல்வோம்” என்று  அறிவித்தார்.

மேலும் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் ஒருமித்த  நிலைப்பாட்டை எட்டுவதற்கு 8 ஆம் தேதி சனிக்கிழமையன்று சட்டமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு 13 கட்சிகளுக்கு முறைப்படி கடி தங்கள் அனுப்பப் பட்டன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.  இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில்  சனிக்கிழமையன்று ஜன.8  அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் குறித்து பல்வேறு கோண ங்களில் விவாதங்கள் நடந்தன. அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், விஜயபாஸ்கர் (அதிமுக), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), வி.பி. நாகை மாலி(சிபிஎம்), சிந்தனைச் செல்வன் (விசிக), சதன் திருமலை குமார் (மதிமுக), தளி ராமச்  சந்திரன்(சிபிஐ), ஈஸ்வரன் (கொமதேக), ஜி.கே. மணி (பாமக), வானதி சீனிவாசன் (பாஜக), ஜவா ஹிருல்லா (மமக), வேல்முருகன் (தவாக), ஜெகன் மூர்த்தி(புரட்சி பாரதம்) ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முற்றுப்புள்ளி

அனைத்துக் கட்சி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“ ஒரு சட்டமன்றம் தனக்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும் போது ஆளுநர் மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்து வம். ஆகவே நான் நேரில் சென்று ஆளுநரை வலி யுறுத்தியும் குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பவில்லை. மாநில உரிமையும் சட்ட மன்றத்தின் சட்ட இயற்றும் அதிகாரமும் கேள்விக் குறியாக்கப்படும் சூழ்நிலை உருவானதால்தான் அவசர அவசியத்துடன் இந்த அனைத்துக் கட்சி  கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். நம் அனை வரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்” என்றார். பிறகு, அடுத்தகட்டமாக எத்தகைய நட வடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர், கூட்டத்தில் அடுத்தகட்டமாக நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்தையும் சீரழிப்பதாகவும் உள்ளதால் நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மக்கள் இயக்கமாகவும் முன்னெடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக, சிபிஎம், பாமக உள்ளிட்ட 12 கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்தன. பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.