tamilnadu

4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, ஏப். 23- தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. விடுபட்ட சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத் தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்படி சூலூரில் கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் வி.பி.கந்தசாமி, அரவக் குறிச்சிக்கு கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் - வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றத்தில் அவனியாபுரம் பகுதி அதிமுக செயலாளர் எஸ்.முனியாண்டி, ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

;