tamilnadu

பெண்களுக்கு 11 மேயர் பதவிகள்

சென்னை,ஜன.18- சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.  ஆதிதிராவிடர் (பொது), ஆதிதிராவிடர் (பெண்கள்), பொது (பெண்கள்) ஆகிய பிரி வினருக்கு மேயர் பதவி இட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல் பட்டு மாவட்டம் தாம்பரம் மாநக ராட்சிகளின் மேயர் பதவி ஆதி திராவிடர் (எஸ்.சி.) பெண் களுக்கு ஒதுக்கப்படுகிறது. திரு வள்ளூர் மாவட்டம் ஆவடி மாந கராட்சி மேயர் பதவி ஆதிதிராவி டர் (பொது) பிரிவுக்கு வழங்கப் படுகிறது. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சி புரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.