tamilnadu

img

சிலி : போராட்டம் வன்முறையாக மாறியதால் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு

சிலி நாட்டில் பொது போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னமெரிக்கா கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில், சமீபத்தில் ரெயில், பஸ் போன்ற பொது போக்குவரத்து கட்டணங்கள் பல மடங்காக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வை எதிர்த்து சிலி நாட்டின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டமானது சில இடங்களில் வன்முறையாக மாறி ரெயில், பஸ் நிலையங்கள் சூறையாடப்பட்டது. மேலும் பஸ் போன்றவற்றை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்தனர். இதனால் சிலி அரசு தலைநகர் சாண்டியாகோ, சக்காபுகோ ஆகிய முக்கிய இடங்களில் அவசரநிலை சட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக அரசு விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 

;