சிவகங்கை, ஜூன் 28- ஊரக வளர்ச்சித்துறையில் பிடிஒ பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.தேர்தல் பணிக்காக பணிமாறு தல் செய்யப்பட்டவர்களை அவர்கள் பணி செய்த ஊருக்கு மாற்ற வேண்டும் என வலி யுறுத்தியும் சிவகங்கை ஊராட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர்களின் உறவினர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்தும், தகுதியான அலுவலகமேலாளரை நிய மனம் செய்ய வேண்டுமென சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட் டத்தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் வேலுச்சாமி,மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். திருப்புவனத்தில் வட்டாரத்தலைவர் பாண்டி. காளையார்கோயிலில் வட்டச் செயலா ளர் குணசேகரன், இளையான்குடியில் வட்டாரச் செயலாளர் மாரிமுத்து கல்லலில் வட்டாரச் செயலாளர் இதயக்கண்ணன், திருப்புத்தூரில் வட்டாரத்தலைவர் பெரியசாமி எஸ்.புதூரில் மாவட்ட இணைச் செயலாளர் குமரேசன், சிங்கம்புணரியில் மாவட்டச் செயலாளர் சுகுமாறன், தேவகோட்டையில் வட்டாரத்தலை வர் ஜெயப்பிரகாஷ், கண்ணங்குடியில் வட்டா ரத்தலைவர் முத்துமாணிக்கம் சாக்கோட்டையில் வட்டாரத்தலைவர் பெரியய்யா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.