tamilnadu

img

சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிடுக

பொள்ளாச்சி,  ஜுன் 12- நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின்  கோரிக்கைகள் தொடர்பாக சங்கத் தலைவர்களுடன் தமிழக அரசு  பேச்சுவார்த்தை நடத்திடக்கோரி, பொள் ளாச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை கள் தொடர்பாக சங்கத் தலைவர்களுடன் தமிழக அரசு உட னடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.  முதன்மை இயக்குநராக இந்திய ஆட்சிப்பணி அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று பொள்ளாச்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொள்ளாச்சி கோட்டத் தலைவர் எம்.அய்யாசாமி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் டி.மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் எஸ்.ஜெகநாதன் வாழ்த்திப் பேசினார். சாலைப்பணியாளர் சங்க மாநில பொதுச் செய லாளர் ஏ.அம்சராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில், கோட்ட பொருளாளர் சின்னமாரிமுத்து நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துக் கொண் டனர்.

;