tamilnadu

மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சேலம், ஆக.23- நீர்வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையின் 16 கண்  மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள் ளது. கடந்த சில நாட்களாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  அதிகரிப்பின் காரணத்தினால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 5 ஆவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரிநீரானது அப்படியே மதகு கள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரியத் தொடங்கியுள் ளது. இதனால் உபரிநீர் கால்வாயான 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் முழுமையாக நிறுத் தப்பட்டுள்ளது. அதேசமயம், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், கிழக்கு மேற்கு கால் வாய் பாசனத்திற்காக 850 கனஅடி திறக்கப்படுகிறது.