சாதி ஆணவப்படுகொலையை கண்டித்து ததீஒமு ஆர்ப்பாட்டம்
கோவை, ஆக.1– தூத்துக்குடியைச் சேர்ந்த பட்ட தாரி இளைஞர் கவின் செல்வ கணேஷ் சாதி ஆணைப் படுகொ லையை கண்டித்து, கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி, தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவ படு கொலை செய்யப்பட்டார். இத னைக் கண்டித்து தமிழ்நாடு முழுவ தும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவல கம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் மகேஷ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் த.நாகராஜ், மற்றும் சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலை வர் கே.மனோகரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுதா, மாண வர் சங்க மாவட்டத் தலைவர் ஜூல்பி, வாலிபர் சங்கச்செயலாளர் அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். முன்னதாக, கவின் செல்வ கணேஷ் சாதி ஆணவப்படுகொ லையை கண்டித்தும், ஒன்றிய மற் றும் மாநில அரசுகள் உடனடியாக சாதி ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பி.சுகந்தி பேசுகையில், நெல்லை இளைஞர் சாதி ஆணவப் படுகொலையை கண்டித்து தமிழக முழு வதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரு கிறது. குறிப்பாக பட்டதாரி, வசதியான இளைஞர் சாதிய வன்கொடுமையால் கொலை செய்யப்பட் டதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் சாதிய ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகி றது. சமூகநீதி மற்றும் பெரியார் பேசிய மண் என பெருமை பேசுகிறோம், இந்த மண்ணில் சாதி ஆணவப் படுகொலை நடக்கிறது. பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது, இதில் காவல்துறை குடும் பப் பின்னணி உள்ள நபர்கள் இதை அரங்கேற்று இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதிகாரம் படைத் தவர்கள் இக்குற்றத்தை செய்துள்ளனர். மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும். குற்றவாளி யின் தந்தையான உதவி ஆய்வாளர் கைது செய்யப் பட்டுள்ளார். அவரது தாயையும் கைது செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 185 சாதிய ஆண வப் படுகொலைகள் நடந்துள்ளது. திமுக தலைவர் இச்சம்பவங்களை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரு வோம் என கூறினார். ஆனால் இதுவரை கொண்டு வர வில்லை. மேலும் தற்போது உள்ள எஸ்.சி, எஸ்.டி சட்டம் போதும் என்கிறார்கள், ஆனால் பிற்படுத்தப் பட்ட வகுப்பை சேர்ந்த இளம் பெண்கள், இளைஞர் கள் பாதிக்கப்படும்போது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தால் எந்த பயனும் இல்லை. உடனடியாக சிறப்பு சட் டத்தை இயற்ற வேண்டும், என்றார்.