குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் ஏரியில் கலக்கும் கழிவுநீர்!
தருமபுரி, செப்.13- இலக்கியபட்டி ஊராட்சி மக்க ளின் குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பிடமனேரி ஏரியில் சாக்கடை நீர் கலந்து, ஆகாய தாமரை ஆக்கிர மித்து துர்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. தருமபுரி வட்டம், இலக்கியம் பட்டி மிகப்பெரிய ஊராட்சியாகவும் முதன்மை ஊராட்சியாகவும் இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பிடமனேரி, வி.ஜெட்டிஅள்ளி, மாந்தோப்பு, நெல்லிநகர் உள்ளிட்ட பகுதிகளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக் கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் முக்கிய நீர் ஆதார மாக இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி ஏரி ஆகிய இரண்டு ஏரிகள் இருந்து வருகின்றன. இதில் பிடமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவில் இருந்து வந் தது. தற்போது ஏரியை சுற்றி ஒரு சில ரால் பத்து ஏக்கருக்கு மேல் ஆக்கி ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரியின் நடுவே 2 திறந்தவெளி கிணறுகள் அமைத்து, ஊராட்சிக்குட்பட்ட பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இப்பகுதி குடியி ருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த ஏரியில் கலந்து வரு வதால், தற்போது சாக்கடை நிறைந்த ஏரியாக மாறியுள்ளது. ஆண்டு தோறும் அரசுக்கு மீன் பாசி விற் பனையில் ரூ.22 லட்சத்திற்கு மேல் வருவாயை ஈட்டி தரும் இந்த ஏரி, தற்போது ஆகாயத்தாமரை நிறைந்து, பார்க்கும் இடம் எல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளும், பன்றிகளும் மேய்ந்து ஏரி மாசுபட்டு துர்நாற்றம் வீசி வரு கிறது. இதனால் ஏரியை சுற்றி இருக் கும் பொதுமக்கள் நோய்த்தொற்றுக ளுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வா கத்திடமும் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என வேத னையுடன் பொதுமக்கள் தெரிவிக் கின்றனர். எனவே, லக்கியம்பட்டி ஊராட்சி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஏக்கர் ஏரி நிலத்தை மீட்க வேண் டும். ஏரிக்கு பாதுகாப்பு வேலி அமைத்து தண்ணீரை சுத்தப்படுத்த வேண்டும். ஏரிக்கோடி பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள உபரிநீர் கால் வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற வேண்டும். தற்போது மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில் ஏரியை தூர்வாரி, ஆகாயத்தாம ரையை அகற்றினால் தருமபுரி நகர மக்களுக்கு சிறந்த சுற்றுலாத் தல மாகவும், படகு சவாரி செய்யவும், பற வைகள் தங்குவதற்கும் ஏதுவாக இருக்கும். மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்ப குதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.