நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நிரப்ப கோரி மனு
தருமபுரி, ஜூன் 9 – 2024-ம் ஆண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பணியிடங்களையும் நிரப்ப வலியுறுத்தி நியமனத்தேர் வில் தேர்ச்சி பெற்ற ஆசிரி யர்கள் தருமபுரி ஆட்சியரி டம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனு வில் தெரிவித்திருப்பதா வது, கடந்த ஆண்டு 21.07. 2024 அன்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வினை தமிழ்நாடு முழுவதும் 25606 தேர்வர்கள் எழு தினோம். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள 2768 காலிப் பணியிடங்கள் என் பது 12 ஆண்டுகளாக பணி வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் அனைவ ருக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. 2013 முதல் தற்போது வரை ஒரு காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல் 2013, 2017, 2019, 2022 ஆம் ஆண்டு வரை தகுதி தேர்வு மட்டும் நான்கு முறை டிஆர்பி தேர்வினை நடத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு நடை பெற்ற நியமன தேர்வை நம்பி காத்திருந் தோம் மேலும் தற்போது 40 வயது முதல் 50 வயதை கடந்துள்ள எங்களுக்கு 2768 காலி பணியிடங்கள் என்பது மிகவும் குறைவா னது. கடந்த 12 ஆண்டுகளில் 15000 மேற் பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கும் பொழுது தற்போது அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் மிகவும் சொற்பமானது. எனவே, தற்போது வரை உள்ள முழு காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் நியமன தேர் வில் 2800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூகத் தில் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்தி லும் பின்தங்கியுள்ள நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வு நிலைபெற காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அதில் தெரிவித்துள் ளனர். முன்னதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு கண்களை கட்டிக்கொண்டு ஆசிரியர்கள் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட் டது.