நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழக அறிவியல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இதில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
