கோவை,அக்டோபர்.20- ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழக அரசு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ. ராதிகா வலியுறுத்தியுள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், நில அபகரிப்பு, காலாவதியான மருந்துகள் பயன்படுத்துதல், யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துதல், அரசின் அனுமதி இன்றி கட்டிடங்கள் எழுப்புதல், போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மாநில பொதுச் செயலாளர் அ. ராதிகா தெரிவித்துள்ளார்.