ஆராய்ச்சி கட்டுரை வழங்கினால் மட்டுமே பதவி உயர்வா? 2 ஆவது நாளாக பல்கலை., பேராசிரியர்கள் போராட்டம்
கோவை செப்.12– கோவை வேளாண் பல்கலைக்கழ கத்தினுள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது இதில் தமிழத் தில் உள்ள அனைத்து பேராசிரியர்க ளும் கலந்து கொண்டுள்ளனர். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இணை பேராசிரியர்கள் உதவி பேராசி ரியர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப்பணி, வேளாண் விரிவாக்கப் பணி, பல்கலைக் கழகத்திற்கான வளர்ச் சிப் பணிகள் ஆகிய நான்கை அடிப் படையாகக் கொண்டு பதவி உயர்வு கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந் தது. இந்த நிலையில் தற்பொழுது ஆராய்ச்சி கட்டுரைகளை மட்டுமே மையமாக வைத்து பதவி உயர்வு வழங் கப்பட்டதாகவும் இதனால் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். கோவையில் வியாழனன்று இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று தமிழ கம் முழுவதும் உள்ள ஆராய்ச்சி நிலை யங்கள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் துணைவேந்தர் அலுவலக வளாகம் முன்பு அமர்ந்து அமைதியான வழியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்ற னர். இந்நிலையில், உயர் மட்டக்குழு கூட் டம் நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் அதற்கு குறிப்பிட்ட நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஆசிரியர்கள் உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அது வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
