கோவை எம்.பி.,யிடம் இன்டர்ன்ஷிப்
கோவை, செப்.16- தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை நாடா ளுமன்ற உறுப்பினரிடம் கல் லூரி மாணவ, மாணவிகள் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் (பயிற்சி) மேற்கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பி னர் பணி மற்றும் பொறுப்பு குறித்து அறிந்து கொள்ள, கோவையை சேர்ந்த அரசு மற்றும் தனி யார் கல்லூரிகளை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் கணபதி ராஜ்குமாரிடம் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள உள்ளனர். தன் னார்வ அமைப்பு மூலம் மாணவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, கோவையை சேர்ந்த 180 மாணவர்கள் இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் பயிற்சிக்கு வருவதற்கான நோக்கம் குறித்து மாணவர் களிடம் கட்டுரைகள் கேட்கப்பட்டது. அதன டிப்படையில் 11 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டு 30 நாட்கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருடன் பய ணிக்க உள்ளனர். அவரது பணி மற்றும் கள ஆய்வு ஆகியவற்றை நேரில் பார்த்து கற்ற றிவதோடு, அரசியல் மற்றும் அரசு சார்ந்த பொது அறிவை மாணவர்கள் பெறவுள்ள னர். இறுதியாக, தில்லியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, அனுமதி பெற்று 11 மாணவ. மாணவிகளும் நாடாளு மன்ற கூட்டத்தொடரை காண ஏற்பாடு செய் யப்படவுள்ளது. இதுகுறித்து பேசிய கணபதி ராஜ்குமார், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் உள்ள பல்வேறு கல்லூரி களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பின ருடன் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் வழங்கப்படு கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி மக்கள் பணி செய்கிறார். கள ஆய்வு ஆகிய வற்றை நேரில் பார்க்க உள்ளனர். இந்த பயிற்சிக்கான நோக்கம் இளைய தலைமுறை யினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பற்றி யும், அவரது பொறுப்புக்கள் என்ன, எந் தெந்த வேலைகளுக்கு நாடாளுமன்ற உறுப் பினர்களை அணுக வேண்டும் போன்ற விவ ரங்கள் தெரிவதில்லை. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் இளைஞர்கள், தேர்தல் நேரங்களில் வாக்களிக்கக்கூட வருவதில்லை. இம்மாதிரியான இன்டர்ன்ஷிப் மூலம் இளம் தலைமுறையினர் பல்வேறு விஷயங்களை கற்றறிய முடியும், என்றார்.