கண்காட்சி விற்பனை: தடை விதிக்க கோரிக்கை!
நாமக்கல், அக்.4- திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் நடத்தப் படும் கண்காட்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் நாமக்கல் மாவட்ட தலைமை சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தீபாவளி பண் டிகை நெருங்கிவரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் திரு மண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் கண்காட்சி விற் பனை என்கிற பெயரில் பலர் தற்காலிக கடைகள் அமைத்து வணிகம் செய்து வருகின்றனர். இதனால் உள்ளூர் சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரம் இழந்து மிக கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இது போல் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் கண்காட்சி விற்பனை நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை மீறியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையிடமும் எந்த ஒரு அனுமதியும் பெறாமலும் பல மண்டபங்களில் கண்காட்சி விற்பனை நடைபெற்று வரு கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்று கண்காட்சி விற்பனை மற்றும் காலி இடங்களில் அமைக்கப்படும் திடீர் கடைகளுக்கு தடை விதித்து, மீறுவோர் மீது கடும் நடவ டிக்கை எடுத்து, வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.