tamilnadu

img

குறைந்தபட்ச கூலியை உறுதி செய்திடுக

குறைந்தபட்ச கூலியை உறுதி செய்திடுக

உதகை, ஆக.18- தோட்டத் தொழி லாளர்களுக்கு குறைந் தபட்ச கூலியை தர வேண்டும் என நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்க (சிஐடியு) பேரவை வலியுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட  தோட்டத் தொழிலாளர் சங்க (சிஐடியு)  பேரவை, கூடலூர் ஜான கியம்மாள் மண் டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தலைவர் சுந்த ரம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில  செயலாளர் கே.சி.கோபிகுமார் துவக்கவுரை யாற்றினார். செயலாளர் எம்.ஆர்.சுரேஷ் வேலை அறிக்கையும், பொருளாளர் பி. ரமேஷ் வரவு செலவு அறிக்கையும் முன்வைத் தனர். இதில், தோட்டத் தொழிலாளர்கள் அனை வருக்கும் இலவச வீடும் மற்றும் நிலம் அரசு  வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியை  அமுலாக்க வேண்டும். தோட்டத் தொழிலா ளர்களின் குடியிருப்பை சீர் செய்ய வேண் டும். டான் டீ மற்றும் இண்டிகோ தொழிலா ளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில், மாவட்டத் தலைவராக சி. வினோத், செயலாளராக எம்.ஏ.குஞ்சு முக மது, பொருளாளராக பி.ரமேஷ் உள்ளிட்ட  11 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். பேரவையில் சிஐடியு நிர்வாகி கள் நவீன் சந்திரன், ராஜன், வர்கீஸ், உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், மணிகண்டன் நன்றி கூறினார்.