வீட்டுமனை வழங்க மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
சேலம், மே 30- வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், என மாற் றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சேலம் மாவட்டம், ஆத் தூர் தாலுகா 2 ஆவது மாநாடு, நரசிங்கபுரம் ஏகாம்பரம் மூப்பர் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று, சங்கத்தின் தாலுகா துணைத் தலைவர் எ.ராஜா தலைமையில் நடைபெற் றது. மூத்த தலைவர் காங்குடையான் சங்கத் தின் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வளர்மதி அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் எம்.குணசேகரன் துவக்கவுரையாற்றினார். தாலுகா செயலாளர் அழகுவேல் மற்றும் ராதா ஆகியோர், அறிக்கைகளை முன் வைத்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ஹரிகிருஷ்ணன், பொருளாளர் எம்.கனக ராஜ், இணைச்செயலாளர் ஏ.கந்தன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எ.முரு கேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், ஆந்திராவை போல், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உத வித்தொகையை ரூ.6000 முதல் ரூ.15,000 வரை உயர்த்தி வழங்க வேண்டும். ஆத்தூர் தாலுகா முழுவதும் இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக ளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். ஆத் தூர் நீதிமன்றம் உள்ளிட்டு அனைத்து அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கு ஏதுவாக, பாதைக ளும், சக்கர நாற்காலிகளும் இருக்கின்ற வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண் டும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட் டையை ஏஏஒய் அட்டையாக மாற்றி, 35 கிலோ அரிசி வழங்குவதை உத்தரவாதப் படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தாலுகா தலைவராக சந்திரன், செயலாளராக எஸ்.அழகுவேல், பொருளாளராக வளர்மதி, துணைத்தலைவர்களாக பத்மினி, பாஸ்க ரன், இணைச்செயலாளர்களாக ரேவதி, ராஜாமணி மற்றும் 17 தாலுகாக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாநில துணைத்தலைவர் வி.ராதாகிருஷ் ணன் நிறைவுரையாற்றினார்.