பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு
நாமக்கல், செப்.25- குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு இணைந்து பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு உதவி ஆய்வாளர் குல்தீப் யாதவ், தலைமை காவலர் ரஞ்சித் குமார், காவ லர் இசக்கிமுத்து, பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு பேரிடர் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கினர். சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட் பது, ஆம்புலன்ஸ் வரவழைப்பது, லாவக மாக தூக்கி படுக்க வைத்து, மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தல், ஆற்றில் வெள் ளம் வந்தால், அதில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பயிற்சிகள் செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது. இதில் வணிக வியல் துறை தலைவர் ரகுபதி, தமிழ்த்துறை தலைவர் முரளிதரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ் குமார், அனைத்து பேராசிரியர்கள், மாணாக்கர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.