tamilnadu

8 கிலோ மீட்டரில் உள்ள ஊருக்கு 100 கிலோமீட்டர் சுற்றி வரும் கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட சுஜ்ஜில்கரை பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சுஜ்ஜில்கரை பகுதியிலிருந்து சமத்துரகடவு வழியாக எட்டு கிலோமீட்டர் சென்றால் காஜனூர் பகுதிக்கு சென்றுவிடலாம். இந்நிலையில்வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் பொதுமக்களை அனுமதிக்காததால் கேர்மாளம் செக்போஸ்ட் வழியாகசுமார் 100 கிலோ மீட்டர் சுற்றிகாஜனூர் பகுதிக்குச் சென்று வருகின்றனர். அதாவது சமத்துரகடவு வழியாக சென்றால் ஒரு மணி நேரத்தில் காஜனூர் பகுதியை அடைந்து விடலாம். இந்நிலையில் கேர்மாளம் செக்போஸ்ட் வழியாக சுற்றிவந்தால் சுமார் 3 மணி நேரம் வீணாகிறது. இப்பகுதியில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கும் மேலாககோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இக் கோரிக்கைகுறித்து மாவட்ட நிர்வாகமும், வனத்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்காலம் தாழ்த்தி வருகிறார்கள்.சுஜ்ஜில்கரை பகுதியில் இருந்து சமத்துரகடவுக்குச் செல்லும் வழியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூங்கில் தோப்புஇருந்து வருகிறது.


இப்பகுதிகளில் இருந்து மூங்கில் வெட்டிசெல்வதற்காக மண் பாதை அமைக்கப்பட்டது. நாளடைவில் அந்த மண் பாதை  சேதமடைந்தது.இந்நிலையில் அந்த வழியை யாரும் சீரமைத்து கொடுக்காததால் மக்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். இந்நிலையில் வீரப்பனை பிடிப்பதற்காக எஸ்டிஎப் எனப்படும் சிறப்பு அதிரடிப்படையினர் அப்பகுதிகளில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த பாதையை அவர்கள் புதுப்பித்து செல்வதற்கான ஒரு வழியை ஏற்படுத்தி வந்தனர். இப்பணி முடிவுற்ற நிலையில் அப்பகுதியில் வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்நிலையில் இப் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகமோ அல்லது மாநில அரசோ ஒரு வழி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அந்தசாலையை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இருப்பினும்வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பயன்படுத்தப்பட்டதாலும், அது புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதாலும் அதில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் இதற்கான நடவடிக்கைகளை வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் தான் எடுக்க வேண்டும். பொதுமக்கள் நடந்து சென்று வரஅனுமதித்து வருகிறோம். வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிமறுக்கப்படுகிறது. எல்லைப் பகுதிஎன்பதால் தீவிரவாத ஊடுருவல்இருக்கலாம் என்ற நிலையில் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை.எனினும் அப்பகுதியில் பேருந்து வசதிகள் செய்து கொடுத்தால் திண்ணல்லி, ராமபுரம், கவடெல்லி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூடும் மாதேஸ்வர மலை கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வர உதவியாக இருக்கும் என கூறினர்.(ந.நி)