tamilnadu

img

குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் மண் சரிவு
 

உதகை, டிச. 2- நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே  மண்  சரிவுகள் ஏற்பட்டதால் குன்னூர் – மேட் டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையி லுள்ள மரப்பாலம், நந்தகோபால் பிரிட்ஜ்,  குறும்பாடி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு  சுவர்களும் இடிந்து விழுந்ததால் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இத னால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள் ளாகி உள்ளனர். இதற்கிடையே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணியில்  நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு  மீட்பு படையினர் மற்றும் காவல்துறையி னர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டனர். இருந்த போதிலும் மாலை 6 மணிக்கு மேலே தான் வாகனங்கள் செல்ல அனும திக்கப்பட்டது.