tamilnadu

img

நடைபாதையை சீரமைத்திட மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

உதகை,பிப்.28- கோத்தகிரி எஸ் கைகாட்டி பகுதியில் உயிரிழப்பு ஏற்ப டும் நிலையில் உள்ள நடைபாதையை சீரமைத்திட வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சிக்கு உட் பட்ட எஸ் கைகாட்டி சன்ஷைன் நகர். இப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி ன்றனர். இவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் நடைபாதை முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இங்குள்ள தடுப்பு சுவர்களும் மிக மோசமாக உள்ளது. இந்த மோசமான தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தால் கீழ்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கடும் உயிர் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த நடைபா தையையும், தடுப்புச்சுவரையும் உடனடியாக சீரமைத் திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோத்தகிரி தாலுகா செயலாளர் வி.மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.

;