tamilnadu

பள்ளி மாணவி பலாத்காரம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை, ஜன. 20 – அன்னூர் அருகே கடந்த 2017ம் ஆண்டு பத் தாம் வகுப்பு பயின்று வந்த மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சதீஷ்குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள குன்னத்தூர்புதூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் வேலை செய்து வந்த கோபி, செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவர் மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்பு றுத்தியுள்ளார். இதற்கு சம்மதிக்காத மாணவியை சதீஷ்குமார் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்புகாரின்பேரில் அன்னூர் போலீ சார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த  வழக்கில்  திங்களன்று நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார். சதீஷ்குமாரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கடத்தலுக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய்  அபரா தமும், பாலியல் பலத்கார குற்றத்திற்கு ஆயுள் தண்ட னையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதி பதி தீர்ப்பளித்தார்.

;