tamilnadu

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

தருமபுரி, செப்.10- பாலக்கோடு வட்டம், பணங்கள்ளி கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பூதன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பணங்கள்ளி கிராமம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள் ளன. இங்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த ஒருமாத மாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து குடிநீரை விலைக்கு வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்ட னர். இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாப்பாரப் பட்டி - தருமபுரி சாலையில் எர்ரப்பட்டி முனியப்பன் கோயில் அருகில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு வட்டாட்சியர் வெங்கட்டேசன் மற்றும் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடி நீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;