அவிநாசி, பிப். 24- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை யொட்டி அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுகவினர் சேவூரில் அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கி கொண்டாடினர். சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமை வகித்து, அதிமுக கொடி யேற்றினார். பின்னர் ஜெயலலிதா உருவப் படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஒன்றியஅவைத்தலைவர் என்.சின்னக்கண்ணு, ஒன்றிய விவசாய அணி துணைத் தலைவர்பி.தங்கவேல், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி,சேவூர் கிளை செயலாளர் எஸ்.மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.கவிதாஅய்யாச்சாமி, ஊராட்சி செயலாளர்கள் தண்டபாணி, ஆர்.சங்கரமூர்த்தி, சேவூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ஆர்.வேலுச்சாமி, அதிமுக நிர்வாகிகள் டி.கிருஷ்ணன், கே.கார்த்தி, சி.எஸ்.அம்பி, எம்.பேபி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.