tamilnadu

img

தியாகி தோழர் பாப்பா உமாநாத்துக்கு ஓசூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது

எல்லோராலும் ‘பாப்பாம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் மாதர் சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தியாகி தோழர் பாப்பா உமாநாத்துக்கு ஓசூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா, மாவட்ட நிர்வாகிகள் மஞ்சுளா, ஜெயந்தி, பாப்பம்மா, புனிதா, சந்திரிகா, மேகலா, ஜான்சி மற்றும் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சேதுமாதவன், வட்டச் செயலாளர் பிஜி.மூர்த்தி, வட்டக் குழு உறுப்பினர்கள் நாகேஷ்பாபு, ஜெயராமன், கிருஷ்ண தேவராஜ், சிஐடியு டிடிகே சங்கத் தலைவர் வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.