மத்திய பட்டு வாரியம் கிருஷ்ணகிரி சார்பில் வேப்பனப்பள்ளி தொழில்நுட்ப சேவை மையத்தின் கீழ்வரும் நல்லூர் கிராம பட்டுப்புழு வளர்ப்பு மையத்தில் பட்டு விவசாயிகள் தின விழா நடத்தப்பட்டது. முனைவர். டாக்டர்.ஜான்ஸி லட்சுமி தொழில்நுட்ப உதவியாளர் ரங்கநாயகி மற்றும் பட்டு வளர்ச்சித் துறையின் ஆய்வாளர் மு.சென்னகேசவன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் மேட்டுப்பாளையம், வனக்கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலைய பட்டுப்புழுவியல் துறை மாணவிகள் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.