tamilnadu

செங்கல்பட்டு கருத்து கேட்பு கூட்டத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டத்தை இணைத்திடுக

செங்கல்பட்டு, ஆக.14- காஞ்சிபுரம்  மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து வருகின்ற ஆகஸ்ட் 19,20 ஆகிய தேதிகளில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், சமுக அமைப்புகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். 19ஆம் தேதி  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் காஞ்சிபுரம் கோட்டம், மதுராந்தகம் கோட்டமும், 20ஆம் தேதி செங்கல்பட்டு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை அரங்கத்தில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய வருவாய் கோட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகம் வருவாய் கோட்டம் மதுராந்தகம், செய்யூர் வட்டங்களுக்குப்பட்ட  மக்கள் செங்கல்பட்டைக் கடந்து காஞ்சி புரம் சென்று ஒரு நாள் செலவழித்து கருத்து தெரிவிக்க வேண்டும்.  மேலும் அருகில் உள்ள செங்கல்பட்டைத் தவிர்த்து மதுராந்தகம் கோட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இணைக்க இருப்பதாக பொதுமக்களிடம் நிலவு கிறது. இதுமட்டுமின்றி செங்க ல்பட்டைக் கடந்து காஞ்சிபுரத்தில் நடைபெறும் கூட்டத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று கருத்துச் சொல்லச் செல்வதே கடின மாகக் கருதுகின்றனர்.  மேலும் மதுராந்தகம் கோட்ட மக்களுக்கு மதுராந்தகத்திலோ அல்லது செங்கல்பட்டிலோ கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎம் கோரிக்கை
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி யுள்ள மனு கூறியிருப்பதாவது:- மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கின்றது. மாவட்டம் பிரிப்பது குறித்து ஆகஸ்ட் 19,20 ஆகிய தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 19ஆம் தேதி காஞ்சிபுரம், மதுராந்த கம் வருவாய் கோட்டங்களைச் சார்ந்த அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், பொதுமக்கள் காஞ்சிபுரத்தில் பங்கேற்க வேண்டும் எனவும், மறுநாள் 20 ஆம் தேதி செங்கல்பட்டில் செங்கல்பட்டு, தாம்பரம் வருவாய் கோட்டங்களை சார்ந்தவர்கள் பங்கேற்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மதுராந்த கம் கோட்டத்தைச் சார்ந்த மக்களி டம் பெருத்த சந்தேகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் வருவாய் கோட்ட த்தைச் சார்ந்தவர்கள் செங்கல்ப ட்டில் நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்பதே பொருத்த மானதாகும். மாவட்டம் பிரிக்கும் போது மதுராந்தகம் வருவாய் கோட்ட த்திற்குட்பட்ட மதுராந்தகம், செய்யூர் வருவாய் வட்டங்க ளைச் செங்கல்பட்டுடன் இணைப்பது தான் பூகோள ரீதியாகவும், போக்கு வரத்திற்கும் மிகச்சரியானது.  எனவே செங்கல்பட்டில் நடை பெறும், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்கும் வகையில் அறிவிப்பில் மாற்றம் செய்து உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.