tamilnadu

36 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம், ஏப்.3-

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய ரவுடிகள், போதைப்பொருள் விற்பனை குற்றவாளிகள், கள்ளசாராய குற்றவாளிகள் என 36 ரவுடிகள் குண்டர்தடுப்பு சட்டத்தினி கீழ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் 3 பேரும், பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் 2 பேரும், வாலாஜாபாத்தில் 2 பேர், படாளத்தில் 2 பேர், செங்கல்பட்டில் 3 பேரும், சூனாம்பேட்டில் 5 பேரும், மாமல்லபுரத்தில் 3 பேர் என மொத்தம் 36 ரவுடிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

;