districts

img

கிடப்பில் போடப்பட்ட ஏரி மேம்பாட்டுப் பணி: மக்கள் அதிருப்தி

தருமபுரி, பிப்.22- பாப்பாரப்பட்டி ஏரியை மேம்ப டுத்தும் பணி கிடப்பில் போடப்பட் டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டத்திற்குட்பட்ட பாப்பாரப் பட்டியிலிருந்து பாலக்கோடு செல் லும் சாலையில் 35 ஏக்கர் பரப்பள வில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு ஜெர்தலாவ் பாசன கால்வா யில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த ஏரியை நம்பி 200 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாசன வசதி  பெற்று வருகின்றன. மேலும், பாப் பாரப்பட்டி ஏரி முழு கொள்ளவை அடைந்தபின், உபரி நீர் அம்மன் ஏரி, கஞ்சன் ஏரி வழியாக தருமபுரி அடுத்த சோகத்துார் ஏரி, ராமக்காள் ஏரிக்கு செல்வது வழக்கம். மேற்கண்ட ஏரி களை நம்பி ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், பாப்பா ரப்பட்டி ஏரி ஆக்கிரமிப்பு காரணமாக ஏரியில் தண்ணீர் முழு கொள்ளவை  எட்டாத நிலை தொடர்ந்தது. மேலும், ஏரியில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி யில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலந்து வந்தது. இதை தடுத்தும், பாப் பாரப்பட்டி ஏரியில் உள்ள ஆக்கிர மிப்பை அகற்றி ஏரியை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று நகர்புற மேம்பாட்டு  திட்டத்தின் கீழ், கடந்த இரு ஆண்டுக ளுக்கு முன்பு பாப்பாரப்பட்டி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கரையை பலப்படுத்துவது, நடை பாதை, மின்விளக்கு அமைப்பது உள் ளிட்ட பணிகளுக்காக ரூ.2 கோடியே 45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து ஏரிக்கரையிலிருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இதனி டையே, ஆக்கிரமிப்புக்களை அகற் றும் போது, அருகே வசித்து வருபவர் கள் தற்போது ஏரிக்கரையில் செல் லும் சாலையை அகற்ற எதிர்ப்பு  தெரிவித்தனர். இதனால் ஏரி மேம் பாடு பணி நிறுத்தப்பட்டது. பேரூ ராட்சி அதிகாரிகள் பாப்பாரப்பட்டி ஏரியை ஆய்வு செய்து நிறுத்தப்பட்ட பணியை விரைந்து முடிக்க அதிகா ரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் பொதுமக்க ளின் கோரிக்கைக்கு தீர்வு காணமால், ஏரி மேம்பாட்டுப் பணியை ஓராண் டுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் ஏரியில் சாக்கடை நீர் நேர டியாக தொடர்ந்து கலந்து வருவது டன், ஆகாயத்தாமரையும் அதிகள வில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித் துள்ளது. எனவே, பாப்பாரப்பட்டி ஏரியில்  நேரடியாக சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும், ஆகாயத்தாமரையை அகற்றவும், கிடப்பில் போடப்பட் டுள்ள பாப்பாரப்பட்டி ஏரி மேம் பாட்டுப் பணியை விரைந்து தொடங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட  நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.