tamilnadu

img

8 வழிச் சாலை திட்டத்திற்கு மரண அடி: கூட்டணியில் இருந்து வெளியேறுமா பாமக? தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் விளாசல்

கள்ளக்குறிச்சி, ஏப். 9-

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பொன். கௌதமசிகாமணியை ஆதரித்து சங்கராபுரம், கள்ளக்குறிச்சியிலும், விழுப்புரம்(தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி உளுந்தூர்பேட்டையிலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் உரையாற்றிய கே. பாலகிருஷ்ணன், இந்த இரண்டு தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி, ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை குவியல் குவியலாக கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஏனென்றால் இங்கே எதிரணி மதவெறி கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எல்.கே.சுதீஷ், வடிவேல் ராவணன் இருவரும் எந்தக் காலத்திலும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்திட முன்வராதவர்கள். தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே எட்டிப் பார்த்து ஓட்டு கேட்பவர்கள். அவர்களுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் மதவெறிக்கும், சாதி வெறிக்கும்தான் பயன்படும்” என்றார்.8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற் றாமல் விடமாட்டோம் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமியின் பக்கத்தில் நின்று கொண்டு அன்புமணி ராமதாஸ் என்ன சொல்லப் போகிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி, அதிமுகவுக் தோல்வி என பிரச்சாரம் செய்யப் போகிறாரா அல்லது கூட் டணி வேண்டாம் என்று வெளியே வரப் போகிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.தேமுதிக வேட்பாளரின் சகோதரியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, பாலியல் வன் கொடுமைகள் எல்லாம் ஒரு பிரச் சனை அல்ல என்றும் நீங்கள் அதிமுக அணிக்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என்று பொள் ளாச்சி சம்பவத்தைப் பற்றி குறிப்பிடும்போது அலட்சியமாக கூறுகிறார். வேதனை என்னவென்றால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பற்றி இவர் பேசியதுதான். இவர்களால் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் பயன் இல்லை. மதவெறி கூட்டணி அமைத்து ஊழல்வாதிகள் உடன் கைகோர்த்துக்கொண்டு வாக்கு கேட்டு வரும் இவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

;