tamilnadu

img

செ.ஜோதிமணிக்கு ஆதரவாக சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

கரூர், ஏப்.13-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணிக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரக்குழுசார்பில் வெள்ளியணை, தாந்தோணிமலை, ராயனூர், உழவர் சந்தை, பேருந்து நிலையம் ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி.ஜீவானந்தம், எம்.தண்டபாணி, திமுக நகரச் செயலாளர் ரகுநாதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் பஞ்சம்மாதேவி, மின்னம்பள்ளி, வெண்ணைமலை, மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செ.ஜோதிமணி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மாவட்ட திமுகபொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி,மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

;