ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. ஒடிசாவில் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் ஒடிசாவில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. அபராஜிதா சாரங்கி, பறக்கும் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் தனிமனித இடைவெளி விதிகளை மீறி அவர் செயல்பட்டார் பாஜக எம்பியின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியில் பரபரப்புடன் காணப்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என பிஜு ஜனதா தளம் குற்றம் சாட்டி உள்ளது. ஊரடங்கு விதிகளை பின்பற்றி மக்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அவர் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
எனினும், ஊரடங்கு விதிகள் எதனையும் மீறவில்லை என சாரங்கி கூறியுள்ளார்.
கடந்த 4ந்தேதி, இதுபோன்று ஊரடங்கு சூழலில் தனி மனித இடைவெளி விதிகளை மீறினார் என அவர் மீது புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து அபராஜிதா, அபராதம் கட்டினார். அவர் மீது எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து தனிமனித இடைவெளியை பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி,கடைபிடிக்க வில்லை என்று இரண்டாவது முறையாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.