tamilnadu

மக்களிடம் பேச பயப்படுவது ஏன்? -ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளருக்கு திறந்த மடல்

மக்களிடம் பேச பயப்படுவது ஏன் என்று   தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின்  மாநில பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளருக்கு திறந்த மடல் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது

அன்புடையீர் வணக்கம்

கவலைதரும் அத்துமீறல்கள்

சமீப காலங்களில் ஈரோடு காவல்துறையின் ஜனநாயக விரோத செயல்களை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன இது கவலைக்குரிய சூழ்நிலையாகும் ஆனால் இந்த அத்துமீறல்கள் எல்லாம் தங்கள் ஆசியோடுதான் நடைபெறுகிற இது என்பது தெரியவருகிறது நிலைமை மேலும் கவலைக்குரியதாக இருக்கிறது மனித நேய வரலாறு கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உயிரோடு இருக்கும் நீரோட்ட மக்களுக்கும் தொண்டாற்றிய சான்றோர்களில் அருட்பணி அந்தோணி வாட்சன் பிரபு முதன்மையானவர் கல்வி வேலைவாய்ப்பு பெண்களின் முன்னேற்றம் மக்கள் மருத்துவம் தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் நகரத்தின் கட்டமைப்பு வசதிகள் என்று பல துறைகளிலும் அவர் முத்திரை பதித்தவர் அவர் பெயரால் பிரச்சனை 80 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ளது கடந்த 28 2 2019 அன்று அரசு விழாவுக்காக ஈரோடு வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரபு பெயரை நீக்கி அறிவித்து விட்டார்கள் இது மிகப்பெரிய அநீதியாகும் ஆர்எஸ்எஸ் கூட்டம் வடமாநிலங்களில் நிகழ்த்திவரும் அராஜகத்திற்கு உப்பாக இருக்கிறது தீர்மானத்திற்கு பதில் இல்லை பெயர் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியருக்கும் மாநகர ஆணையாளருக்கும் மாநில சிறுபான்மை ஆணையருக்கும் மாவட்ட சிறுபான்மை அலுவலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது இதுவரை பதில் இல்லை காவல்துறையின் எதிர்மறை தலையீடு 18 6 2010 9 அன்று தொடர் முழக்கம் எழுப்பி காவல் துறையின் அனுமதி கேட்டோம் ஈரோடு மாநகரத்தில் இதற்கென்றே காவல்துறை ஒதுக்கியுள்ள இடங்களில் மக்கள் நடமாட்டமே இல்லாத தெற்கு அலுவலகத்திற்கு எதிரில் உள்ள காலி இடத்தை கேட்டிருந்தோம் 32 காவல் தடைச்சட்டம் அமலில் உள்ளதாக குறிப்பிட்டு ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் அனுமதி மறுத்திருக்கிறார் 32 காவல் தடை சட்டத்தின் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இது எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை அமலில் இருக்கும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் உத்தரவின் நகலை அரசியல் கட்சிகளுக்கும் வெகுமக்கள் அமைப்புகளுக்கும் கொடுக்க வேண்டும் நாங்கள் 25 12 5 2019 தேதி அன்று ஈரோடு தெற்கு காவல் நிலையத்திற்கு விண்ணப்பம் கொடுத்து அனுமதி கேட்டிருந்தோம் ஆனால் 12 6 2019 தேதியிட்ட கடிதத்தில் தான் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் 32 சட்டம் அமலில் இருப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கிறார் இனிமேலாவது 30 இரண்டு காவல் தடைச்சட்டத்தை பிறப்பிக்கும்போது அரசியல் கட்சிகளுக்கும் வரும் மக்கள் அமைப்புகளுக்கும் நகல்களை உடனுக்குடன் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மனுதாரர் தொடர் முழக்கம் எழுப்பினர் உள்ள இடமான ஈரோடு நகரின் பிரதான பகுதியாக உள்ளதாலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நகரின் மிக முக்கியமான சாலையாக உள்ளதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் என்பதாலும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்த இடம் ஈரோடு நகரின் மையத்தில் உள்ளது அதே சமயம் மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள இடம் என்பது ஊர் அறிந்த உண்மை ஈரோடு நகரத்தில் காவல்துறை அனுமதி சில இடங்களில் இந்த இடம்தான் மிகவும் முக்கியத்துவம் குறைந்த மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத வாகனப் போக்குவரத்தும் நெரிசலை அறியாத பொதுப் போக்குவரத்து தேவையில்லாத முக்கியமற்ற சாலை என்பதை அனைவரும் அறிவர்.

சாலையின் தெற்கு ஓரம் முழுவதும் முழுமையான ஆக்கிரமிப்பு நிரந்தரமாக இருக்கிறது காவல்துறை சொல்கிற நெரிசலான சாலை என்றால் இந்த ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக நீடிப்பது எப்படி காவல்துறை கண்டுகொள்ளாதது ஏன்

சாலையின் நடுவே சந்தை

மேலும் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் வார சந்தை இந்தச் சாலையில்தான் கூடுகிறது இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சந்தை நடைபெறுகிறபோது இருசக்கர வாகனம் கூட இந்த சாலையில் இயல்பாக செல்ல முடியாது இது காவல்துறைக்கு தெரியாமல் போனது எப்படி பாதாள சாக்கடை மின் கேபிள் பதிக்கும் பணி ஊராட்சிக்கோட்டை குடிநீர் பணி போன்றவற்றில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

இந்தப் போக்கு வரத்து மாற்றத்தின் காரணமாக எந்த வாகனமும் இந்த வழியாக வருவதில்லை பயணிகள் பேருந்து மினிபஸ் சரக்கு வண்டிகள்

ஷேர் ஆட்டோ போன்ற எதுவும் இந்த சாலையில் வராது அப்படி இருக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் அனுமதியை மறுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இட்டுக்கட்டி எழுதியிருக்கிறார்

விண்ணப்பத்திற்கு எத்தனை நாளில் பதில் கிடைக்கும்

தொடர் மாதத்திற்கு முன் அனுமதி பெறவில்லை என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார் தொடர் முழுக்க திருப்பி குறிப்பிட்ட தேதி 18 6 2019 ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்து தேதி 12 அன்று 2019 சுமார் ஒரு மாத காலம் ஆகியும் எந்த பதிலும் கூறாமல் இருப்பது காவல்துறையின் மெத்தனமாக அல்லது மனுதாரரின் குற்றமா

அதன்பிறகு 8 .6. 2019 தேதி என்று காவல் துறை கண்காணிப்பாளருக்கு விண்ணப்பம் கொடுத்து அவர் 11 6 2010 9 அன்று வாய்மொழியாக அனுமதி மறுக்கிறார் அதைத் தொடர்ந்து 12 6 2019 அன்று ஈரோடு மக்களவை உறுப்பினர் ஆர் கணேசமூர்த்தி காசிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் துரைராஜ் ஆகியோர் உடன் நேரில் வந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் விண்ணப்பம் கொடுத்து அனுமதி கோரினால் அது சமயம் இப்படிப்பட்ட ஜனநாயக போராட்டங்களுக்கு காவல்துறை தொடர்ச்சியாக அனுமதி மறுப்பதை சுட்டிக் காட்டி இதில் மாற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்

காவல்துறை கண்காணிப்பாளர் மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளரை பார்க்கும்படி கூறினீர்கள் நான் 13 6 2010 9 அன்று அவரை சந்தித்தேன் இப்பொழுது 12 6 2019 தேதியிட்ட கடிதத்தைக் கொடுத்து அதில் அனுமதியை மறுத்து இருக்கிறார்

மக்களிடம் பேச பயப்படுவது ஏன்

அதைத் தொடர்ந்து நான் மீண்டும் 13. 6. 2019 என்று கைப்பேசி மூலம் காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்புகொண்டு நடந்ததை கூறினேன் நீங்களும் விசாரித்துவிட்டு சொல்வது எல்லாம் கூறினீர்கள் அடுத்த நாள் 14 6 2019 அன்று நான் மீண்டும் கைபேசி மூலம் காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்ட போது சாலையின் பெயர் மாற்றம் குறித்து அரசாணை தரவில்லை என்றும் பெயர் மாற்றத்திற்கான அலுவலக செயல்முறைகள் கொடுக்கப்படவில்லை என்றும் உறக்கம் அவசியம் இல்லை என்றும் மனு கொடுத்தால் போதும் என்றும் கூறினீர்கள் நான் முதல்வர் 22 2010 9 அன்று அறிவித்ததை இதுவரை திரும்பப் பெறவில்லை என்பதையும் சில வணிக நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகையில் சாலையின் பெயரை மாற்றி இருப்பதையும் சுட்டிக் காட்டினேன் தனியார் நிறுவனங்களின் செயலுக்கு காவல்துறை பொறுப்பு ஏற்காது என்று கூறினீர்கள் சரி நாங்கள் முழக்கம் எழுத்துகளை வருகின்ற மக்களை இந்த விளக்கத்தை சொல்லி அனுப்பி விடுகிறோம் என்று கேட்டுக்கொண்டேன் தங்கள் அனுமதிக்கவில்லை

அஞ்சலி செலுத்தும் அதற்கும் அனுமதி மறுப்பா

மாவட்ட காவல்துறையில் இந்த செயல்பாடுகள் அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும் இதில் முதல் முறையல்ல கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள் 24. 4. 2019 அன்று சர்ச் முன்பாக அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பொழுது ஈரோடு காவல் ஆய்வாளர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அனுமதி மறுத்தார் பிறகு நாங்கள் உள் அரங்கான பெரியார் மன்றத்தில் நடத்திக் கொள்வதாக சொன்னோம் அவருக்கு அனுமதி மறுத்தார் அதை எழுத்து மூலம் கேட்டபொழுது நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அடுத்த நாள் 25 நாள் 2019 என்று பெரியார் மன்றத்தில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு வாய்மொழியாக அனுமதி கொடுத்தார்

விதிவிலக்கு என்னாச்சு

நகர காவல் சட்டம் 30 இரண்டு உட்பட எந்த சட்டமும் மரண ஊர்வலம் இரங்கல் நிகழ்ச்சி திருமணம் கோவில் திருவிழாக்கள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு தருகின்றன ஆனால் அஞ்சலி நிகழ்ச்சிக்கு கூட 1008 கெடுபிடிகளை இப்போது தான் பார்க்கிறோம்

கோட்சேவுக்கு ஆதரவாக காவல்துறையை

மேலும் கடந்த முப்பது ஒன்னு 2019 என்று தேசப்பிதா காந்தி படுகொலை செய்யப்பட்ட எழுபதாம் ஆண்டு கருத்தரங்கம் ஈரோடு பெரியார் மன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தோம் அன்று காலையில்தான் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் தடை உத்தரவை காவல் துறை ஊழியர் என்னிடம் வழங்கினார் உடனே நாங்கள் சிலர் உங்கள் முகாமை அலுவலகத்திற்கு உங்களைச் சந்திக்கும் நீங்கள் மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க சொன்னீர்கள் நாங்கள் இரண்டு முறை அலுவலகம் சென்றோம் அவர் அலுவலகம் வரவில்லை என்று தெரிவித்தார்கள் மாலையில் பெரியார் மன்றத்திற்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வந்தோம் அங்கே போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களை விரட்டினார்கள் வெளிப்புற கதவை சாத்தி தாளிட்டாள் அப்போது அங்கு வந்த மன்ற பொறுப்பாளர் தாய் சண்முகம் அவர்களை சத்தம் போட்டு போலீசை வெளியேற்றினார் கதவைத் திறக்கச் சொன்னார் அப்போது போலீஸ் படை கூட்டமாக வெளியே நின்று கொண்டு வரும் வரை விரட்டிக் கொண்டிருந்தார்கள் மக்கள் போலீசை தாண்டி உள்ளே வந்து அமர்ந்தார்கள் கருத்தரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது அரங்கத்திற்குள் நடைபெறுகின்ற கூட்டத்திற்கு கூட தடை செய்கிற அளவுக்கு காவல்துறை அராஜகம் தலைவிரித்தாடுகிறது

சில தினங்களுக்கு முன்பு 26.1. 2019 அன்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தேசிகரை உன்னத நிகழ்ச்சியையும் காவல்துறை சீர்குலைத்து விட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருத்தத்தோடு சொன்னார்கள் 12. 6 .2019 அன்று தங்கள் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது 10 .6 .2019 அன்று நீட் தேர்வை எதிர்த்து வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதித்த பொழுது இங்கே அனுமதி கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளோம் அப்பொழுது தங்களுடன் இருந்த சிறப்பு காவல் துறை அதிகாரி வாலிபர் சங்கத்திற்கு அனுமதி இல்லை என்றும் தன்னிச்சையாக குறிப்பிட்டார் இது காவல்துறை சில அமைப்புகளைப் பற்றி முன் கருத்துக்கு வந்து அதன் அடி அதன்படி தான் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதாரண மனிதனுக்கு வழங்கியிருக்கின்ற எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை உள்ளிட்ட மனித உரிமைகளை வழங்கி இருக்கிறது ஈரோடு மாவட்ட காவல் துறையின் செயல்பாடுகள் இதற்கு எதிர் மாறாக இருக்கின்றன அரசு அதிகாரிகள் கடமை சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதே தவிர தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக இருக்கக்கூடாது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம் இந்த உண்மைகள் எல்லாம் இந்திய மக்கள் வெள்ளையரை எதிர்த்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் விளைவாக கிடைத்தவை இந்த உண்மைகளை யார் படித்தாலும் எந்த வடிவில் தடுத்தாலும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்