tamilnadu

img

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு... ஒரே நாளில் 9,600 பேருக்கு கொரோனா  

மாஸ்கோ 
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா வைரஸ் புதிய அவதாரத்தைத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசு ராணுவத்தைக் களமிறக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 9 ஆயிரத்து 623 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1 லட்சத்து 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் 53 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,222 ஆக அதிகரித்துள்ளது. 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர். குறிப்பாக 39 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 

ஐரோப்பா கண்டத்தில் ஒரு நாடு ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வரலாற்றை ரஷ்ய படைத்துள்ளது. 
 

;