அல்பேனியா நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அல்பேனியாவை உள்ளூர் நேரம் அதிகாலை 4 மணிக்கு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. தலைநகர் டிரானாவில் வீடுகளில் இருந்த மக்கள் தெருக்களில் குவிந்தனர். அல்பேனியாவின் ஷிஜாக்கிலிருந்து வடமேற்கில் 10 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளர். சுமார் 140 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அல்பேனியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.
கடந்த செப்டம்பர் 21 அன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அல்பேனியாவை தாக்கியது. இதில் சுமார் 500 வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.