tamilnadu

img

வெம்பக்கோட்டை அகழாய்வு: காதணி, வளையல் கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மணி, காதணி மற்றும் சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கியது. முன்னதாக கண்ணாடி மணிகள் கல் மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது சுடுமண்ணால் செய்யப்பட்ட மணி, காதணி மற்றும் சங்கு வளையல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 2,395 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.